earn money

genuinemails.com

Tuesday, June 22, 2010

என்ர வீரம்!

வாய் முத்திச்
சொல்தடிச்சு,

இழுபறி-கைகலப்பாகிச்
சட்டை கிழிய,

உதடுவெடிச்சு ரத்தம் வர,

முடியெல்லாம் பிச்செறிஞ்சு
விழுந்துபுரண்டுருண்டெழும்பி

இனி -
ஏலாதெண்டு தெரிஞ்சு...

தலைதெறிக்கத் தப்பியோடி,

நாய்க்கழிவு, வால் எல்லாம் மிதிச்சு
அதுவும் குலைச்சுத் துரத்த
உச்சுக்காட்டி,

அரைக்கழிசான் இழுத்துப் பிடிச்சு,

ஓடிப் படலைபாய்ஞ்சு,

கதவும் இறுக்கிமூடி

"ஏலுமெண்டா,
என்ர அப்பர் வீட்டிலயிருக்கேக்க
வந்து பாரடா!"வெண்டன்.

(இப்போதைக்கு இது போதும்!)

No comments:

Post a Comment