வாய் முத்திச்
சொல்தடிச்சு,
இழுபறி-கைகலப்பாகிச்
சட்டை கிழிய,
உதடுவெடிச்சு ரத்தம் வர,
முடியெல்லாம் பிச்செறிஞ்சு
விழுந்துபுரண்டுருண்டெழும்பி
இனி -
ஏலாதெண்டு தெரிஞ்சு...
தலைதெறிக்கத் தப்பியோடி,
நாய்க்கழிவு, வால் எல்லாம் மிதிச்சு
அதுவும் குலைச்சுத் துரத்த
உச்சுக்காட்டி,
அரைக்கழிசான் இழுத்துப் பிடிச்சு,
ஓடிப் படலைபாய்ஞ்சு,
கதவும் இறுக்கிமூடி
"ஏலுமெண்டா,
என்ர அப்பர் வீட்டிலயிருக்கேக்க
வந்து பாரடா!"வெண்டன்.
(இப்போதைக்கு இது போதும்!)
No comments:
Post a Comment